Friday, February 17, 2012

இயக்குனர் ஸ்ரீதரும் மக்கள் திலகம் எம் ஜி ஆரும்

சிவாஜியை வைத்து சிவந்த மண் மற்றும் ஊட்டி வரை உறவு என்று இரண்டு படங்களை தந்த ஸ்ரீதர் அவர்கள், மக்கள் திலகம் எம் ஜி ஆரை வைத்து எடுத்த முதல் படம்தான் "உரிமைக்குரல்". இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன் ஸ்ரீதர் அவர்களின் "சித்ராலயா" நிறுவனம் கடன் சுமையில் சிக்கி இருந்ததாம் . இதை அடைக்க எம் ஜி ஆரை வைத்து ஒரு படம் எடுத்தால் மட்டுமே இதிலிருந்து மீள முடியும் என்று முடிவெடுத்து எம் ஜி ஆரை அணுகினார். மக்கள் திலகம் எம் ஜி ஆரும் உடனே ஒப்புகொண்டு "உரிமைக்குரல்" படத்தில் நடித்து கொடுத்தார்.

அன்றைய சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம் ஜி ஆர், நடித்த படங்களில் எல்லா அம்சமும் இருக்க வேண்டும். இன்றைய மசாலா படங்கள் போல , அம்மா செண்டிமெண்ட், மரத்தை சுற்றி ரெண்டு காதல் பாடல் , ஒரு கதாநாயக துதி பாடல்,  நல்லதாக ரெண்டு சண்டைகாட்சி என எல்லாமும் இருக்க வேண்டும். ஆனால் அதுவரை ஸ்ரீதர்  நிறைய கதைக்கு  முக்கியத்துவம்  உள்ள படங்களாக எடுத்து வந்தார். இதையே ஒரு சவாலாக எடுத்துகொண்டு அவர் எழுதி இயக்கிய படம்தான் "உரிமைக்குரல்" . 

படத்தின் கதை என்று பாரத்தால், அண்ணன் தம்பிக்குள் நடக்கும் பாசப்போராட்டம் அதை தொடர்ந்து மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நம்பியாரை பழிவாங்குவது, இடையில் கொஞ்சம் லதாவோடு மோதல் பிறகு காதல் பின் சுபம். தன வழக்கமான முக்கோண காதல் கதையில் இருந்து வெளியே வந்து ஏறக்குறைய ஒரு மசாலா படத்தை கொடுத்தார் ஸ்ரீதர். 

மக்கள் திலகம்  எம் ஜி ஆருக்கு இது போன்ற பத்திரங்களில் நடிப்பது கை வந்த கலைதானே. அதிலும் இந்த படத்தில் அவர் உடைகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. வழக்கமான வேட்டிக்கு பதிலாக சுருள் வைத்த வெட்டி மற்றும் ஒற்றை குதிரை பூட்டிய  ரேக்ளா வண்டி என அமர்க்களம்.

படத்திற்கு இசை MS. விஸ்வநாதன் அவர்கள் அமைத்திருந்தார். "ஆம்பளைங்களா" மற்றும் "விழியே கதை" பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், "மாட்டிகிட்டாரடி" , "பொண்ணா பொறந்த", "ஒரு தாய் வயிற்றில் பிறந்த" பாடல்களை கவிஞர் வாலியும்எழுதி இருந்தனர்.
இன்னும் நிறைய விஷயங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அன்புடன்
அசோக் குமார் 

Tuesday, February 7, 2012

படித்ததும் பிடித்ததும்- 07/02/12

சட்ட சபையில் உட்கார்ந்து கொண்டு எதை பார்க்க கூடாதோ எங்கே பார்க்க கூடாதோ அதை பார்த்து கொண்டு இருந்ததால் இன்று நாடே அந்த மனிதர்கள் (மனிதர்கள் தானா???) மீது காரி உமிழாத குறையாக திட்ட வேண்டும் போல் இருக்கிறது.
********************************************
இந்திய கிரிக்கெட் அணியின் சொதப்பலான ஆட்டத்தை பார்த்து வெறுத்து போன சஹாரா நிறுவனம் தான் வழங்கி  வந்த  ஸ்பான்சரை பிடுங்கி ஹாக்கி அணியிடம் கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டப்படவேண்டிய விஷயம். காலம் கடந்தாவது நல்லது நடந்தால் சரிதான். இனியாவது இந்தியாவின் தேசிய விளையாட்டு புத்துயிர் பெறட்டும்.
*********************************************
டைம் (TIME) பத்திரிக்கை வெளியிட்டுள்ள நூறு சிறந்த உலக படங்களின் வரிசையில் சத்யஜித் ரே  இயக்கிய "The Apu Trilogy" என்ற படமும், தமிழில் மணிரத்னம் இயக்கி வெளிவந்த "நாயகன் படமும் இடம் பிடித்துள்ளது. அதன் இணைப்பு இங்கே .
*******************************************
யு டியூபில் இந்த காணொளியை எதேச்சையாக காணும்படி நேர்ந்தது. "தேவர் மகன்" படத்தில் இடம் பெற்ற "இஞ்சி இடுப்பழகி" பாடல் உருவான கதை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். கொஞ்சம் சுவாரசியமாக இருந்ததால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

******************************************************
நேற்றுதான் நண்பன் படம் பார்த்தேன், ஏற்கனவே "3 idiots" படத்தை மூன்று நான்கு முறை பார்த்துவிட்டேன், இதில் புதிதாக ஷங்கர் என்ன செய்திருக்கிறார் என்று பார்க்கவே இந்த படத்தை பார்த்தேன். படத்தில் என்னை ரொம்பவும் கவர்ந்தது சத்யன் மட்டுமே. படத்தில் சத்யராஜ் கேரக்டரும் சத்யன் கேரக்டரும்முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் இருவருமே தங்கள் பத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் அமீர் கான் போலவே முகபாவங்களை கொடுத்திருக்கிறார் விஜய் அட்டை காபி தான் என்றாலும் நல்லாவே இருந்தது.
*************************************************
spider man  படத்தின் புதிய படம் ஒன்றின் ட்ரைலர் வெளி வந்திருக்கிறது. படம் இந்த சம்மரில் வெளியிடப்படும் போல தெரிகிறது.


**********************************************
நான்  ரசித்த  புகைப்படம்

 ****************************************************
நான் ரசித்த பாடல் 
"இசைஞானி இளையராஜாவின்" இசை அறிவைப்பற்றி நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை.குறிப்பாக"ஹே ராம்" படத்தில் "இசையில் தொடங்குதம்மா" பாடல் என்னை எப்பவும் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறது. எப்போது கேட்டாலும் ஏதோ புதிதாக கேட்பது போல் இருப்பதே இதன் சிறப்பு என்று நினைக்கிறேன். இந்த பாடலின் குரல் தேர்வும் அப்படியே, "அஜய் சக்ரபோர்த்தி" என்ற பெங்காலி பாடகர் தமிழை இவ்வளவு சிறப்பாக உச்சரித்திருக்கிறார்.

***********************************************
அன்புடன் 
அசோக் குமார்