சிவாஜியை வைத்து சிவந்த மண் மற்றும் ஊட்டி வரை உறவு என்று இரண்டு படங்களை தந்த ஸ்ரீதர் அவர்கள், மக்கள் திலகம் எம் ஜி ஆரை வைத்து எடுத்த முதல் படம்தான் "உரிமைக்குரல்". இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன் ஸ்ரீதர் அவர்களின் "சித்ராலயா" நிறுவனம் கடன் சுமையில் சிக்கி இருந்ததாம் . இதை அடைக்க எம் ஜி ஆரை வைத்து ஒரு படம் எடுத்தால் மட்டுமே இதிலிருந்து மீள முடியும் என்று முடிவெடுத்து எம் ஜி ஆரை அணுகினார். மக்கள் திலகம் எம் ஜி ஆரும் உடனே ஒப்புகொண்டு "உரிமைக்குரல்" படத்தில் நடித்து கொடுத்தார்.
அன்றைய சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம் ஜி ஆர், நடித்த படங்களில் எல்லா அம்சமும் இருக்க வேண்டும். இன்றைய மசாலா படங்கள் போல , அம்மா செண்டிமெண்ட், மரத்தை சுற்றி ரெண்டு காதல் பாடல் , ஒரு கதாநாயக துதி பாடல், நல்லதாக ரெண்டு சண்டைகாட்சி என எல்லாமும் இருக்க வேண்டும். ஆனால் அதுவரை ஸ்ரீதர் நிறைய கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக எடுத்து வந்தார். இதையே ஒரு சவாலாக எடுத்துகொண்டு அவர் எழுதி இயக்கிய படம்தான் "உரிமைக்குரல்" .
படத்தின் கதை என்று பாரத்தால், அண்ணன் தம்பிக்குள் நடக்கும் பாசப்போராட்டம் அதை தொடர்ந்து மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நம்பியாரை பழிவாங்குவது, இடையில் கொஞ்சம் லதாவோடு மோதல் பிறகு காதல் பின் சுபம். தன வழக்கமான முக்கோண காதல் கதையில் இருந்து வெளியே வந்து ஏறக்குறைய ஒரு மசாலா படத்தை கொடுத்தார் ஸ்ரீதர்.
மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கு இது போன்ற பத்திரங்களில் நடிப்பது கை வந்த கலைதானே. அதிலும் இந்த படத்தில் அவர் உடைகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. வழக்கமான வேட்டிக்கு பதிலாக சுருள் வைத்த வெட்டி மற்றும் ஒற்றை குதிரை பூட்டிய ரேக்ளா வண்டி என அமர்க்களம்.
படத்திற்கு இசை MS. விஸ்வநாதன் அவர்கள் அமைத்திருந்தார். "ஆம்பளைங்களா" மற்றும் "விழியே கதை" பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், "மாட்டிகிட்டாரடி" , "பொண்ணா பொறந்த", "ஒரு தாய் வயிற்றில் பிறந்த" பாடல்களை கவிஞர் வாலியும்எழுதி இருந்தனர்.
இன்னும் நிறைய விஷயங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
அன்புடன்
அசோக் குமார்
இன்னும் நிறைய விஷயங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
அன்புடன்
அசோக் குமார்