Sunday, December 18, 2011

படித்ததும் பிடித்ததும்


தமிழக அரசியலில் பெரும் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது, இதுவரை நகமும் சதையுமாக இருந்துவந்த முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் பிரிந்திருக்கின்றனர், பிரிந்தனர் என்பதை விட சசிகலா துரத்தப்பட்டுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். இதற்க்கு முன்பு கூட இதுபோல் ஒருமுறை நடந்து மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொண்டார். இதுவும்  ரொம்ப நாள் நீடிக்காது என்று சொல்பவர்கள் உண்டு. ஒன்றுமட்டும் தெரிகிறது, இது நீடித்தால் தமிழ்நாட்டுக்கே நல்லது என்று. காலம் தாழ்த்திய நடவடிக்கை என்றாலும் பாராட்டுக்குரியது. இனியாவது ஆட்சி நிரவாகத்தில் எந்த அதிகார மையத்தின் தலையீடும் இல்லாமல் நல்லாட்சி நடந்தால் மகிழ்ச்சியே.
===========================================
மத்திய அரசு நினைத்தது ஓரளவு நடந்துவிடும்  போல் தோன்றுகிறது. தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தை திசை திருப்ப முல்லை பெரியாறு ஆணை பிரச்சினையை அவர்கள் வளர்த்துவிட மக்கள் முல்லைபெரியாரை குறிவைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கூடங்குளம் பிரச்சினை எங்கே இரட்டடிப்பு செய்யப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
========================================
முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் புகைப்படங்களை பார்த்தேன், புகைப்படங்களே, படத்தின் எதிர்ப்பார்ப்பை கூட்டுகின்றன. நடிகர் முரளி மகன் அதர்வா-அமலபால் நடிக்கும் இப்படத்தின் மூலம் அதர்வா நல்ல இடத்தை தமிழ் சினிமாவில் பிடிப்பார் என்றே தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


 =============================================
நான் ரசித்த புகைப்படம்
முக புத்தகத்தில் கண்டெடுத்தது.

========================================
MS. விஸ்வநாதனும் இளையராஜாவும்  இனைந்து இசையமைத்த இந்த "மெல்ல திறந்தது கதவு" படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அந்த வகையில் இந்த பாட்டு என் விருப்பத்திற்குரிய பாடல்.
======================================
அன்புடன் 
அசோக் குமார்

1 comment: