Friday, December 9, 2011

படித்ததும் பிடித்ததும்-12-10-2011

காவிரி, கிருஷ்ணா அணைகள் போல முல்லை பெரியாறு அணை விசயத்திலும் நாம் சோடை போகப்போவதற்க்கான அறிகுறிகளே தெரிகின்றன. வைகோ மட்டும் அங்கங்கே மேடை போட்டு குரல் கொடுப்பதவும், நம் தமிழக அரசு இந்த பிரச்சினைக்கும் அரசுக்கும் சம்மந்தமே  இல்லை என்பது போலவும் நடந்துகொள்கிறது. ஆளும் கட்சி ஒரு முழுநாள் "அடைப்பு போராட்டத்தை அறிவித்து மத்திய அரசை நிர்பந்திக்காமல், ஏனோ தானோ என்று இருப்பது கவலை அளிக்கிறது. 
=======================================
எல்லா ஊடகங்களிலும் சேவாக்கே  ஆக்ராமித்திருந்தார் நேற்று முழுவதும். ஒருநாள் போட்டிகளில் அவரின் இரட்டை சதம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், இந்த சாதனையை சச்சின் முதலில் நிகழ்த்தினார். நீண்ட நாட்களாக சோபிக்காமல் இருந்த சேவாக்  மறுபடியும் பார்முக்கு திரும்பி இருப்பது இந்திய  அணிக்கு நல்ல விஷயம்தான்.

======================================
பெரும் பிரச்சினைகளுக்கு பின்னால் சிம்புவின் "ஒஸ்தி" வெளிவந்திருக்கிறது. ஹிந்தி டபாங் படத்தைதான் எடுத்திருக்கிறார்கள் என்பது அறிந்ததே. டபாங் படத்தை ஏற்கனவே  பார்த்துவிட்டேன், படம் அருமையான மசாலா கலவை. ஒஸ்தியை இன்னும் பார்க்கவில்லை. "கலசலா" பாட்டு எனக்கும் பிடித்திருக்கிறது. ரொம்ப நாளைக்கு பிறகு L.R. ஈஸ்வரி குரலை கேட்க்க நல்லாத்தான் இருக்கு. 


========================================
மெக்டோனல்ட் மற்றும் KFC பிரியர்கள் இதை கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவும் 

 =============================================
நான்  ரசித்த புகைப்படம்
============================================
AR. ரெஹ்மானின் இசையில் 90-களில் வந்த மெலடி பாடல்கள்  ரொம்பவே இனிமையானது. புதிய முகம் படத்திற்காக " நேற்று இல்லாத மாற்றம்" !!திரை பாடலில்கூட கவிதையை இருக்கிறது .
"கடவுள் இல்லை என்றேன், தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன், ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை, அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை, கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்று தானே காற்று வீசும் வரை!!!!
=========================================
அன்புடன் 
அசோக் குமார்

1 comment:

  1. nice pictures ... .thanks for sharing.. please read my tamil kavithaigal in www.rishvan.com

    ReplyDelete