Tuesday, November 1, 2011

பேச வைத்தது யார் ??

இந்த கவிதை 10  வருடத்திற்கு முன் " ஆனந்த  விகடன்" என்று நினைக்கிறேன் புத்தகத்தில் வந்தது. என் பழைய டைரியை புரட்டியபோது கிடைத்தது. ரொம்பவும் சுவாரசியமான கவிதை, எளிமையாகவும் ரொமபவே எதார்த்தமாகவும் எழுதப்பட்டது. காதலில் ரொம்ப காயப்பட்ட ஒரு ஆத்மாதான் இதை எழுதி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எழுதியவர் பெயரை எழுதி வைக்க வில்லை (மன்னிக்கவும் மறந்துட்டேன்). என்னவோ, எழுதிய அந்த மனிதர் இப்போது  எந்த நிலையில் இருப்பார் என தெரிந்து கொள்வதில் கொஞ்சம் ஆவலாகவும் இருக்கிறேன். இதோ அந்த கவிதை. 

 பேச  வைத்தது யார் ??
பல அனுபவங்கள் 
எதை சொல்லி 
எதை விடுவது 
புத்தாண்டு வந்தால் 
புகைப்பது 
குடிப்பது 
கிடையாது என்று 
செய்த சத்தியத்தையா ??
உன் கோப தினங்களில் 
மறந்த சத்தியத்தையா ??
உன் ஆளுமையில் 
துவண்டு 
துங்கிய தினங்களையா??
போதுமடி 
உன் உறவு என்று 
திமிறி, திருப்பி 
ஏங்கிய நாட்களையா ??
மறக்கின்ற சக்தி 
அதிகமடி எனக்கு 
உன் கணவனுடன் 
நீ கைகோர்த்து 
காரில் ஏறி திரும்பி 
அற்ப புழுவாய் 
பார்த்த அந்த நாட்கள் ...
காரில் இறங்கி 
கர்சிப்புடன் 'ச்சே 
ஒரே தூசி என்கிறபோது 
நினைத்தேனடி 
நீ பேசவில்லை 
உன் கணவனிடம் 
உள்ள பணம் உன்னை 
பேச வைத்தது  என்று !!!

உண்மையில் நான் ரொம்பவே ரசித்த கவிதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு இதை பதிவிடுகிறேன்.

அன்புடன்
அசோக் குமார் 

3 comments:

  1. அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.

    //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


    .

    ReplyDelete