Monday, June 20, 2011

படித்ததும் பிடித்ததும் 21 /06 /11

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சி.பி.ஐ., கலைஞர், "டிவி' பங்குதாரர்களான தி.மு.க., எம்.பி., கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத் ரெட்டியையும்  இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சேர்த்தது. இவர்கள், கடந்த ஒரு மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும், பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் மற்றும் டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது அனிவரும் அறிந்ததே. இதையடுத்து, இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இவர்களது கடைசி நம்பிக்கையே இந்த ஜாமின் மனு தான். இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், சி.பி.ஐ., சார்பில் 17ம் தேதி தாக்கலான பதில் மனுவில், "2ஜி' ஊழல் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் இவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. இவர்களை விடுவித்தால், சாட்சிகளை கலைத்து விடுவர் என, தெரிவித்துள்ளது.இதை கேள்விப்பட்டு கருணாநிதி டெல்லி கிளம்பி போயுள்ளார். என்ன நடக்கிறது என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
==================================================

"பிரதமர் பதவியை எப்போது ஏற்பது என்பது குறித்து ராகுல் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என, காங்., கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் திக் விஜய் சிங்கும் இதே பாட்டை பாடினார். "பிறக்கும்போதே பிரதமராக பிறக்கறாங்க "...
===================================================

நான் ரசித்த பாடல்
இளையராஜாவின் இசையில் பாடும் நிலா பாலு அவர்களின் தேன் குரலில் "கொக்கரக்கோ" படத்திற்காக கீதம் சங்கீதம் பாடல். என் மனதிற்கினிய பாடல் எப்போதுமே !!!

==================================================
அன்புடன் 
அசோக் குமார்

1 comment: