Wednesday, May 25, 2011

ஜேப்படி வித்தைக்காரன்


ஒரு கண பொழுதில் மற்றவர் 
பர்சை தன் பாக்கெட்டுக்கு மாற்றும் 
கண் கட்டு வித்தைக்காரன் !!!


ஓடும் பேருந்திலே ஏறி 
ஓடும் பேருந்திலே இறங்கும் 
சாகசக்காரன் !!

பிளேடை மட்டுமே மூலதனமாக 
கொண்டு தொழில் செய்யும் 
வியாபார காந்தம் இவன் !!

குன்று இருக்குமிடமெல்லாம் 
குமரன் இருப்பான் கூட்டம் 
இருக்குமிடமெல்லாம் இவன் இருப்பான் !!

இவனுக்கும் மாதம் 
முதல் தேதி கொண்டாட்டம் 
கடைசி தேதி திண்டாட்டம் !!

விழுப்புண் வாங்கியதில் 
பழுவேட்டரைருக்கு சளைத்தவனல்ல
எல்லாம் பிடிபட்டபோது வாங்கியவை !!

திறந்த பர்சில் கிழிந்த பத்து ரூபாய் 
நோட்டையும் நகை அடகு வைத்த ரசீதையும்
பார்த்து கலங்கினான் என்றால் 
 அவனும் மனிதனே !!

அன்புடன் 
அசோக் குமார்

Monday, May 23, 2011

கண்டோவன்-700 ஆண்டு கால பழசு-படங்கள் இணைப்பு

வீடு கட்டுவது எல்லோருடைய கனவு. அதிலும் நடுத்தர வர்கத்தினர் இதில் முந்தி. காரணம் வாடகை வீடுகளில் இவர்கள் படும் சிரமம். 1988- இல் இயக்குனர் பாலு மகேந்திரா எடுத்த படமான "வீடு" நடுத்தர வர்க்கம் படும் துன்பத்தை படம்பிடுத்து காட்டி இருந்தார். அதுமாதிரி இல்லாமல் இயற்கை கொடுத்த வரபிரசாதமான இந்த இடத்தை பற்றி தெரிஞ்சுக்கலாமா\??


ஈரானின் வடமேற்கு மூலையில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான கிராமம் தான் "கண்டோவன்". அது மட்டுமில்லாமல் உர்மியா என்ற ஏரியின் ஒரு மூலையில் இந்த சின்ன கிராமம் இருக்குது. அப்படி என்ன தான் இருக்கு இந்த ஊர்ல.


நம்மள மாதிரி செங்கல்,  சிமெண்ட் , மணல் ஏதும் இல்லாமல் மலையில் இருக்கிற பாறைகளை செதுக்கி வீடுகளாக மாற்றி இருகிறார்கள். இதில் ஆச்சர்யபடவைக்கும் விஷயம் என்னன்னா எல்லா வீடுகளும் கூம்பு வடிவத்தில் இருக்கும்.

இந்த வித்யாசமான தோற்றம் எப்படி வந்தது என ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து கண்டுபிடித்தனர். இந்த பகுதியை ஒட்டி உள்ள மலையான "சஹாந்த்"-இல் இருந்து வெளியான எரிமலையின் சாம்பல்தான் இதற்கு காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள. 

இந்த மலை "சஹாந்த்"பல சிறப்புக்கள் வாய்ந்தது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை பகுதிகளில் வெந்நீர் ஊற்றுகள் நிறைந்து இருக்கின்றன. இவற்றுக்கு பல நோய்களை குணமாக்கும் வல்லமை இருப்பதாக அறியபடுகிறது. இந்த மலையில் உள்ள பாறைகளை வயதை கணகெடுத்து பார்த்ததில் இவை 11,000-ம் வருட பலமையானவையாம். தொன்மையான பாரசீக தோட்டங்களை "பக்ஹ்ஸ்" என்று அழைப்பார்கள். அவை "பாரடைசா (pairadaeza)"  என்றும்  அழைக்கபடுகின்றன. இதுவே பின்னாளில் ஆங்கிலத்தில் "பரடிஸ் (paradise)"  என்று அழைக்கப்பட்டது.


இந்த 700 வருட பழமையான கிராமம் உருவான வரலாறு கொஞ்சம் சுவாரசியமானது. மங்கோலிய படைகளிடம் இருந்து தப்பித்து மறைந்து கொள்ளவும், அகதிகளை குடியமர்த்தவும் இந்த இடம் பயன்பட்டதாக சொல்கின்றார்கள் இங்கு காலம் காலமாக வாழும் மக்கள்.  பிறகு இவர்கள் இங்கேயே நிரந்தரமாக குடியேறிவிட்டனர்.



இந்த வீடுகளின் உட்புறம் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டு படுக்கை அறை, மற்றும் கால்நடைகளை கட்டிவைக்கும் பகுதி என பிரித்து வைத்துள்ளனர். 




இதையெல்லாம் விட முக்கியமான விஷயம் என்னன்னா இந்த இடம் பிரபலமாவதை கண்டு நிறைய சுற்றுலா பயணிகள் வருகின்றனர் அவர்களுக்காக இங்கே தங்கும் விடுதி (Hotel) ஒன்றும் உள்ளது. 

இன்னும் இதை பற்றி நெறைய தெரிஞ்சிக்கணும்னா இந்த சுட்டியை அழுத்துங்க  
எனக்கும் இந்த ஊரை பார்க்கணும் போலத்தான் இருக்கு கொடுபணைனு ஒன்னு  வேணுமே. 

அன்புடன் 
அசோக் குமார்

Wednesday, May 18, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்-II

மயக்கமா கலக்கமா
படம்: சுமைதாங்கி
பாடகர்: P.B. ஸ்ரீநிவாஸ்


தெய்வமே தெய்வமே
படம்: தெய்வ மகன்  
பாடகர்: T.M.சௌந்தரராஜன்


ஆயிரம் நிலவே வா.....!!!
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்


 மல்லிகை என் மன்னன் மயங்கும்... !!
படம்: தீர்க்க சுமங்கலி
பாடியவர்: வாணி ஜெயராம்.


இலக்கணம் மாறுதோ...!!
படம்: நிழல் நிஜமாகிறது
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்


தாமரை கன்னங்கள்....!! 
படம்: எதிர் நீச்சல்  
பாடகர்: P.B. ஸ்ரீநிவாஸ்


ஆடலுடன் பாடலை...!!!
படம்: குடியிருந்த கோயில்
 

பூந்தேனில் கலந்து...!!
படம்:ஏணி படிகள்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்

அன்புடன் 
அசோக் குமார்

Friday, May 13, 2011

மணிஷ் திவாரி, பாஜாக - ஒரு ஒப்பிடு

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றங்கள் புதிய பாதையை நோக்கி புறப்பட்ட வேளையில் , தோல்வியுற்ற கட்சிகள் தீர்ப்பை ஏற்பதாக சொல்லி கொள்கின்றனர் .  அளவுக்கு அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளும், ஒரு துறையைக் கூட விட்டு வைக்காமல், அனைத்து துறைகளிலும் கருணாநிதியின் குடும்பத்தினர் மூக்கை நுழைத்து, ஏகபோக ஆதிக்கம் செலுத்தியதும் தான், தி.மு.க.,வை படுதோல்வி அடையச் செய்து, ஆட்சியை பறிகொடுக்க வைத்துவிட்டது. 

         ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு, தி.மு.க., அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் குற்றச்சாட்டு, இந்த துறையை விட்டு வைத்தனர் என்று கூற முடியாத அளவிற்கு, அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் மூக்கை நுழைத்து, ஏகபோக ஆதிக்கம் செலுத்தியதன் விளைவால், ஆட்சியைப் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.அரசுத் துறை, சினிமாத் துறை, கேபிள் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதல்வர் குடும்பத்தினர், ஐந்து ஆண்டுகளாக அக்டோபுஸ் போல கபளீகரம் செய்து வந்தனர். இதனால், ஒவ்வொரு துறையிலும் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மேலும், அரசியலிலும் குடும்ப ஆதிக்கம் மேலோங்கியது. இவர்களின் அத்துமீறல்களால், ஒவ்வொரு வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த கோபத்தை, தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஈழ தமிழர் பிரச்சினைக்கு ஆதரவாக தமிழ் நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சியையே புறகணிக்க. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி சொல்வது  தமாசாக உள்ளது. "நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு மக்களின் ஆதரவு சிறிதளவு கூட கிடைக்கவில்லை" என்கிறார் மனுஷன் . எனக்கு ரெண்டு கண் போனாலும் பரவாயில்ல எதிராளிக்கு ஒரு கண்ணாவது போகணும் என்பது மாதிரி இருக்குது.   எப்போதான் திருந்த போராங்களோ!!


புதுசா பதவிக்கு வர அம்மா என்ன பண்ண போராங்களோ !!!

Friday, May 6, 2011

கனிமொழி என்கிற டூபாகரும் ராம் ஜெத்மாலனி என்கிற அப்பாடக்கரும்

            
    மஞ்சள் துண்டு மகேசன் கலைஞரின் அருமை புதல்வி கனிமொழியை காப்பாற்ற ஆரிய வக்கீல் ராம் ஜெத்மாலனி வாதாட பழியை  "தகத்தகாய கதிரவனான" தலித் போர்வாள் ராஜா பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் . 

                    
ஏழை மக்களுக்கு மலிவு விலையில் செல் போன் விற்ற அமைச்சர் ராஜா இன்று கலைஞர் குடும்பத்துக்காக திகார் ஜெயில் கம்பிகளை நிரந்தரமாக எண்ண தயாராகிறார்.  "ராசா தலித் என்பதாலேயே அவரைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள்" என்று ராசாவின் கைதுக்கு முன்பாக துடித்தெழுந்தார் மஞ்சள் துண்டு. இன்று அவரால் நியமிக்கப்பட்ட "ஆரிய" வக்கீல் ராம் ஜெத்மாலனி இதற்கெல்லாம் முழு காரணம் ராஜா மட்டுமே கனிமொழி இதில் நிரபராதி என வாதாடியுள்ளார். 


          ராம் ஜெத்மாலனி பற்றி கொஞ்சம் பார்ப்போம். இது வரை இந்த மனிதர் ஒரு நல்ல கேசில் ஆஜராகி நல்லவர்களுக்காக வாதாடியதில்லை. இவர் ஆஜரான கேஸ் சில சாம்பிள். 

1. ஹர்சத் மேத்தா என்பவன் செய்த பங்குசந்தை மோசடிக்கு ஆதரவாக 
2. கேதான் ப்ரேக் என்பவன் செய்த பங்குசந்தை மோசடிக்கு ஆதரவாக 
3.நம் பாராளுமன்றத்தை தாக்கிய அப்சல் குரு என்பவனுக்கு  ஆதரவாக 
4. இந்தியாவையே உலுக்கிய ஜெசிக்கா என்ற பெண்ணை கொலை செய்த மனுஷர்மா என்பவனுக்கு  ஆதரவாக
5. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல இந்திரா காந்தியை கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக 

ஆகா ராம் ஜெத்மாலனி கனிமொழிக்காக வாதாட போகிறார் என்றவுடன் புரிந்துகொள்ளலாம் குற்றவாளி யார் என்பதை.


இதில் கொடுமை என்னன்னா பாவம் மஞ்சள் துண்டு குடும்பத்துக்காக ஆண்டிமுத்து ராஜாவும், கலைஞர் டிவி இயக்குனர் சரத் ரெட்டியும் பலிகடா ஆக்கபட்டதுதான் .    இதை எல்லாம் பார்க்கும்போது வடிவேல் காமெடிதான் ஞாபகம் வருது "சபாஷ் புலிகேசி ராஜா தந்திரங்களை கரைத்து குடித்து இருகிறாயடா"

அன்புடன் 
அசோக் குமார்


Monday, May 2, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்

காலத்தால் அழியாத பாடல்களை தொகுத்து பதிவிடலாம் என இருக்கிறேன். தமிழ் திரை உலகம் நல்ல பல இசை அமைப்பாளர்களை தந்துள்ளது. அரை நூற்றாண்டுகள் கடந்தும் அழியாமல் நிற்கும் அவர்களின் திரை இசை பாடல்கள் இதோ!!

கிருஷ்ணா முகுந்தா!
படம்: ஹரிதாஸ்
பாடகர்: தியாகராஜ பாகவதர்



அவள் செந்தமிழ் தேன்!!!
படம்: மாலை இட்ட மங்கை
பாடகர்: T.R. மகாலிங்கம்

ஒ ரசிக்கும் சீமானே!!
படம்: பராசக்தி


காலங்களில் அவள் வசந்தம்
படம்: பாவ மன்னிப்பு
பாடகர்: பி. பீ. ஸ்ரீநிவாஸ்


ஒரு பெண்ணை பார்த்து
படம்:தெய்வ தாய்


கண்ணும் கண்ணும் கலந்து....!!!

படம்: வஞ்சி கோட்டை வாலிபன்


பாட்டும் நானே...!!
படம்: திருவிளையாடல்
பாடகர்: T.M. சௌந்தரராஜன்


அவளுக்கென்ன அழகிய....!!
படம்: சர்வர் சுந்தரம்
பாடகர்: T.M. சௌந்தரராஜன்

எங்கிருந்தாலும் வாழ்க!!!
படம்: நெஞ்சில் ஒரு ஆலயம்
பாடகர்: A.L. ராகவன்


மனிதன் என்பவன்...!!
படம்: சுமைதாங்கி
பாடகர்: பி. பீ. ஸ்ரீநிவாஸ்


இன்னும் தொடரும்

அன்புடன்
அசோக் குமார்