நீ போகும் சாலை மருங்கிலும்
முத்த செடிகளை பதியன் போட்டு
நட்டு வைத்திருக்கிறேன்
சம்மதமாயிருந்தால் எச்சில் எனும்
தண்ணீர் விட்டு போயேன்!!!
===================================================== கந்துவட்டிகாரி
நீ கொடுத்த ஒற்றை
முத்ததிற்காக என்னிடம்
நூறு முத்தம் கேட்கும்
கந்துவட்டிகாரி நீ!!!!!!
======================================================
முத்த வரம்
காதலில், கோழைகளுக்கு
என்றும் கிடைப்பதில்லை
முத்தம் என்னும் வரம்!!!
தொடரும் மீனவர்கள் படுகொலை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவி சோனியா இனி மீனவர்கள் காக்கபடுவார்கள் என உறுதி அளித்து போனார். போன ஒரு மாதத்துக்குள் நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்கள். வடநாட்டு ஊடகங்கள் அனைத்தும் இந்திய மீனவன் இறந்தான் என்று செய்தி வெளிடுவதில்லை, மாறாக தமிழ் மீனவன் இறந்தான் என்றே செய்தி வெளியிடுகிறன. தமிழ் நாடு எப்போது இந்தியாவில் இருந்து பிரிந்தது என்று தெரியவில்லை. ========================================================= தேர்தல் நேரத்தில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட 49 கோடி பணத்தை யாரும் திருப்பி வாங்க வரவில்லை என்று தமிழக தலைமை அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார். அதன் பிறகு இதுவரை யாரும் மீதம் உள்ள 49 கோடி ரூபாய் பணத்தை திருப்பி வாங்க வரவில்லை என்றார் பிரவீண்குமார். இவை கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணமாக இருக்கலாம் என்றும் வருமான வரி செலுத்தியதற்கான ஆவணம், ஆதராம் இருப்பவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் பிரவீண்குமார் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் நடந்த சோதனையில் மொத்தம் 54 கோடியே 17 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது. சொந்த பணமாக இருந்தால் தானே திறப்பி கேட்க!!! ============================================================ தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து, 19 பேர் நீக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை நீக்கக்கோரி, பல்வேறு இடங்களில், கட்சியினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அதன்படி, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டார இளைஞர் காங்கிரசார், தங்கபாலுவின் உருவ பொம்மையை எரித்தனர்."கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 19 பேரையும் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். என வலியுறுத்தி கட்சியினர் கோசமிட்டுள்ளனர். கட்சி தொண்டர்கள் தன கட்சி தலைவரின் உருவ பொம்மையை எரித்தது வரலாற்றில் முதல் முறை என நினைக்கிறேன். வாழ்க காங்கிரஸ் கட்சி வளர்க அதன் கொள்கை!!
========================================================= நான் ரசித்த காணோளி
வார்த்தைகளின் முக்கியத்துவம் என்னவென்று அறியாமல் பேசும்போது நாம் இழப்பவைகள் நமக்கே தெரிவதில்லை. சிறு வார்த்தை மாற்றமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தகூடியவை. இந்த காணோளியை பார்த்தாலே புரியுமே!!!!!
இந்த பாட்டு வெள்ளி விழா படத்துக்காக V.குமார் இசை அமைத்தது. இந்த படத்தில் ஒரு வித்தியாசம் என்னன்னா அதுவரை இனிமையான பாட்டுகளை P.சுசீலா பாடி வந்தார். இவருக்கு நேரெதிர் L.R. ஈஸ்வரி, கொஞ்சம் சத்தமான ராப் மாதிரி பாட்டுகளையே பாடி வந்தார். V.குமார் இந்த படத்தில் இவர்களை அப்படியே மாற்றி பாட வைத்தார். L.R. ஈஸ்வரி, "காதோடுதான் நான்" என்ற இனிமையான பாட்டையும் , P.சுசீலா "நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்" என்ற சத்தமான பாட்டையும் பாடி ஒரு புதுமை படைத்தார்கள்.
கிளைமாக்ஸ் காட்சிகள் ஒரு படத்தை நன்றாக ஓடவும் வைத்திருக்கின்றன அதே சமயம் கவிழவும் வைத்திருக்கின்றன. பெரும்பாலான தமிழ் படங்களில் கதாநாயகன் வில்லனை அடித்து போட்டுவிட்டு கதாநாயகியை கை பிடிப்பார், அப்படி இல்லாமல் சற்றே வித்தியாசமான, நான் ரசித்த பத்து கிளைமாக்ஸ் காட்சிகளை தொகுத்து இருக்கிறேன்.
அன்பே சிவம்
மற்றவர் கஷ்டபடுவதை பார்த்து கலங்குபவர் கூட கடவுளே என்று சொல்ல வந்த படம்!!! பறவைகள் எப்போதும் ஒரே இடத்தில தங்காது போன்ற வசனங்கள் சிறப்பு.
காதல் கோட்டை
கடைசி வரை இவர்கள் சேர்வார்களா மாட்டார்களா என சீட்டின் கடைசி நுனி வரை உட்கார செய்தது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. அகத்தியனுக்கு மிக பெரிய வெற்றிப்படம். பார்க்காமலே காதல் என்ற புதிய பாதையை தமிழ் சினிமாவிற்கு அறிமுக படுத்திய படம். இந்த படத்திற்கு பிறகுதான் பார்க்காத காதல், பார்த்த காதல், இன்டர்நெட் காதல், செல்போன் காதல் எல்லாமே வந்தது.
ரமணா
இப்படித்தான் கிளைமாக்ஸ் இருக்கும் என்று இருக்கும் தமிழ் சினிமாவில் சற்றே வித்தியாசமான கிளைமாக்ஸ். கடைசி காட்சியில் விஜயகாந்த் பேசும் வசனங்கள் நறுக்!!
காதலுக்கு மரியாதை
காதலுக்கு பெற்றோர் சம்மதம் ரொம்ப முக்கியம் என்று சொன்ன படம். இந்த கிளைமாக்ஸ் பார்த்தவர்கள் அழாமல் இருப்பது ரொம்ப கஷ்டம்.
சந்தோஷ் சுப்ரமணியம்
பசங்க வளர்ந்துவிட்டாலும் இன்னும் ஒன்றும் தெரியாத குழந்தைகளை போல் நடத்தும் பெற்றோர்கள் பார்க்கவேண்டிய காட்சி இது.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
தன் காதலன் கூட தன்னை இராசி இல்லாதவள் இரு நினைத்து விட்டானே என்று அழும் தபு மனதில் ஒட்டிகொண்டார்.
சித்திரம் பேசுதடி
இந்த படத்துக்கு இப்படி ஒரு கிளைமாக்ஸ் இருக்கும் என்று யாரும் யூகித்து இருக்கமுடியாது. கிளைமாக்ஸ் ஒன்றுக்காகவே மிஸ்கினுக்கு சபாஷ் போடலாம் (காணொளி கிடைக்கவில்லை)
அந்த ஏழு நாட்கள்
என் காதலி உங்கள் மனைவி ஆகலாம் ஆனால் உங்கள் மனைவி என் காதலி ஆகமுடியாது என்று ஒரு டயலாக் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம். பாக்யராஜ் படங்களில் இப்படி ஒரு டச் இருக்கும் அது இந்த படத்தில் உச்சம்.
கன்னத்தில் முத்தமிட்டால்
சில கிளைமாக்ஸ் காட்சிகள் நம்மை நெகிழ வைக்கும், அப்படிப்பட்ட ஒரு கிளைமாக்ஸ் தான் இது. நந்திதா தாஸ் நடிப்பில் அப்படியே மெய் மறந்து போகலாம். தன் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் முடியாமல் உணர்சிகளை கொட்டி இருப்பார். மணிரத்தினம் படங்களில் இந்த படத்தில் பாத்திர தேர்வு சிறப்பு.
மூன்றாம் பிறை
காதல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இப்படி கூட இருக்கும் என்று உதாரணம் இந்த கிளைமாக்ஸ். பாலுமகேந்திரா போன்ற படைப்பாளி கிடைத்தது தமிழ் சினிமாவின் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.
இவற்றைவிட சிறந்த கிளைமாக்ஸ் காட்சிகள் இருக்கலாம், எதோ என் சிற்றறிவுக்கு எட்டியவரை தொகுத்து இருக்கிறேன், ஏதேனும் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்!!!